கொலம்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு கொலம்பியாவின் பெரிரா பகுதியில் உள்ள ரிசரால்டாவில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று இரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண்சரிவில் 60 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. இதில் மண்ணில் புதைந்து பலர் சிக்கினர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 14 பேர் பலியானதாகவும், 35 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், கனமழை தொடரும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல கொலம்பியா அரசு அறிவுறுத்தி உள்ளது.